
நிலக்கோட்டை பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல்
நிலக்கோட்டை, ஆக.1- தமிழக அரசு நகராட்சி பேரூராட்சி மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தபடி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் ராமசுப்பிரமணி நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்களுக்கான நியமன விண்ணப்பத்தை நிலக்கோட்டை பேரூராட்சி தலைமை எழுத்தர் சேட்டுவிடம் வழங்கினார்.
அப்போது உடன் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் நீலாவதி, தலைவர் உஷா நந்தினி, மாநில செயற்குழு உறுப்பினர் சிவசக்திவேல், மற்றும் சங்க நிர்வாகிகள் பாலு கனகராஜ் பாலகுரு உட்பட பலர் வேட்பு மனு தாக்கல் என்பது கலந்து கொண்டனர்.






