
101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீபெரும்புதூர் ஜூலை 25
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 101 ஜமீன் தண்டலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாலை 3.30 மணி அளவில் நடைபெற்றது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் பரிமளா தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில்,உதவி தலைமை ஆசிரியர் கிரேஸ் பேபி முன்னிலை வகித்திட. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர் .
இதில் இடைநிற்றல் தவிர்த்தல், மாணவர்களின் திறன் மற்றும் பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.






