March 2, 2026
ராம்சேது யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

ராம்சேது யாத்திரை பணியாளர் சங்கம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

ராமேஸ்வரம் கோதண்டராமர் கோவிலில், ராம்சேது யாத்திரை பணியாளர் சங்கம் சார்பாக பக்தர்களுக்காக சிறப்பு அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சங்க தலைவர் பிச்சை (எ) தெச்சனாமூர்த்தி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. கோவிலுக்கு வருகைதந்த ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள், பக்தர்கள் இந்த அன்னதானத்தில் பங்கேற்று திருப்தி அடைந்தனர். பக்தர்களின் சேவையை தர்மமாகக் கருதி, சமூகப் பொறுப்புடன் இந்த நலத் திட்டத்தை சங்கம் செயல்படுத்தியது.

நிகழ்வில் சங்க உறுப்பினர்கள்  மற்றும் தன்னார்வலர்களும் இணைந்து பணியாற்றினர். பக்தி உணர்வுடன் நடைபெற்ற இந்த நிகழ்வு, அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *