
கோவில் கமிட்டி என்ற பெயரில் திமுக கவுன்சிலர்கள் அரசு நிலம் 2.6 ஏக்கர் ஆக்கிரமிப்பு.
ராமாபுரத்தில் 100 கோடிகக்கு மேல் மதிப்புள்ள 2.6 ஏக்கர் அரசு நிலத்தை கலாசத்தம்மன் கோவில் கமிட்டி என்ற பெயரில் திமுக கவுன்சிலர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அறப்போர் இயக்கம் வழக்கும் தொடுத்து இந்த நிலம் அரசுக்கு தான் சொந்தம் என்று தீர்ப்பும் ஆகி விட்டது.

ஆனாலும் அபகரிப்பாளர்கள் தற்பொழுது மேலும் ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளார்கள். மேலும் 11 மீ சாலையை ஆக்கிரமிப்பு செய்து 2.9 மீ அளவிற்கு சுருக்கி உள்ளனர். காரணம் திமுக நிர்வாகிகள் கோவில் கமிட்டி என்று ஒன்று வைத்து கொண்டு அப்பட்டமாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அபகரித்து வருகின்றனர்.

ஒரு ஆம்பூலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாதபடி சாலையை மறித்து அதன் மூலம் இந்த 2.6 ஏக்கர் நிலத்தை முழுவதுமாக அபகரிக்க வேலை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பல கவுன்சிலர்கள் செய்யும் நில அபகரிப்பு அட்டூழியங்கள் நேரடியாக மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.
இதை தடுக்க வேண்டிய தாசில்தார், சென்னை ஆட்சியர், மாநகராட்சி அதிகாரிகள், நில நிர்வாக ஆணையர் என அனைவரும் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ??
இந்த மாடல் பெயர் என்ன முதல்வரே ??