June 30, 2025
விளாம்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நிகழும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

விளாம்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் நிகழும் சம்பவங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது முன்னாள் எம் எல் ஏ பாலபாரதி ஆர்ப்பாட்டத்தில் பேச்சு

நிலக்கோட்டை, ஜூன்.24-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப கோரியும், கலை பாடத் தொகுப்புகளையும் கொண்டுவர கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விளாம்பட்டி கிளை சார்பாக கிளைச் செயலாளர் போத்தி ராஜா தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினரும். மத்திய குழு உறுப்பினருமான பாலபாரதி கலந்து கொண்டு பேசியதாவது:-

இன்றைய தமிழக அரசு விரைவான நடவடிக்கையாக பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் அதுவும் அவசர காலமாக நியமிக்கப்பட வேண்டிய கவனத்திற்குரிய செயலாகும். அதுவும் விளாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி கிராமப்புற மாணவ மாணவிகளின் வாழ்வாதாரமாக உள்ள ஒரு மிகப்பெரிய பள்ளிக்கூடம் ஆகும். என்ன என்ன இந்தப் பள்ளியில் திங்கட்கிழமை அதிகமான ஆசிரியர் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு வீதியில் வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் நிலைக்கு கொண்டு வருவது மிகவும் கவலை அளிக்கிறது. ஒரு சமூகம் வளர வேண்டுமென்றால் கல்வி மிகவும் அவசியம் என்பது தமிழக அரசு மிக தீவிரமாக அவசியம் கருதி செய்து வருகிறது என்பது பங்கு தெரிகிறது.

இருப்பினும் தற்போது விளாம்பட்டியில் ஆசிரியர பணி காலியிடங்களும், கலை பாடப்பிரிவு மீண்டும் கொண்டுவர வேண்டும், விளாம்பட்டி கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் ஒரு குற்றம் சாட்டி வருகின்றனர். அதனை உடனடியாக பாதுகாக்க காவலாளி நியமிக்க வேண்டியும் பள்ளி இடியும் நிலையில் இருப்பதை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு கட்டிக் கொடுக்கவும் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு ஆதாய் கோஸ், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ராஜாராம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், காசிமாயன், ரவிச்சந்திரன், குருசாமி, கார்த்திகேயன், விளாம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சோபனா அழகுமுருகன், மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.