
பழனி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி துணை கண்காணிப்பாளர் தனன்செயன் அதிரடி உத்தரவின் பேரில் பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பழனி குரும்பட்டியை சேர்ந்த விஜயகுமார் (47)த/பெ ரங்கராஜ் பாட்டாளி தெரு நபர் விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஹான்ஸ் கணேஷ் வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 7 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.