
தென்காசி மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள் கடும் மன அழுத்தம்…!!
டிஸ்ட்ரிக்ட் கோர்ட் என்கிற எண் கருவூலத்திற்கு வழங்கப்படாததால் 3 மாதமாக சம்பளம் இல்லை.
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் வனத்துறை ஊழியர்களுக்கு 3 மாத சம்பள பாக்கி – கண்டு கொள்ளாத தமிழக அரசால் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கடும் மன அழுத்த பாதிப்பு. ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டமானது பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் முதல் தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலகம் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் தென்காசி மாவட்ட வனத்துறை அலுவலகமானது துறை ரீதியான மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது தென்காசி மாவட்ட வனத்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கூடிய டிஸ்ட்ரிக்ட் கோர்ட் என்கிற எண்ணானது மாவட்ட கருவூலத்திற்கு இதுவரை வழங்கப்படாததால்தென்காசி மாவட்டத்தில் உள்ள வனத்துறை ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் தங்களது குழந்தைகளின் பள்ளி செலவு விட்டு செலவுகளுக்கு பணம் இல்லாமல் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். குறிப்பாக, அடிமட்ட ஊழியர்கள் 3 மாத சம்பள பாக்கியால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி வரும் நிலையில் தங்களது குடும்பங்களை நாள்தோறும் நடத்துவது என்பதே பெரிய சவால் நிறைந்ததாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தென்காசி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் அவர்களது வேலையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனே தலையிட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் என வனத்துறை ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.