June 30, 2025
விமான நிலையம் அருகே புல்லில் தீ!

விமான நிலையம் அருகே புல்லில் தீ!

மதுரை.

மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய வெள்ளிக்கல் சாலை பகுதியில், விவசாய நிலத்தில் புற்களில் திடீர் தீப்பற்றி எரிந்தது – தீயணைப்பு வாகனம் உள்ளே செல்ல முடியாமல் மரக்கிளைகளை வைத்து போராடி அனைத்தனர்.

மதுரை விமான நிலையம் அருகே உள்ள வெள்ளக்கல் பகுதியில் பல வருடங்களாக விவசாயம் செய்யாமல் போடப்பட்டுள்ள நிலத்தில் காய்ந்த புற்களில் திடீர் தீப்பற்றி எரிய தொடங்கியது.

 மதுரையில் பலத்த காற்றின் காரணமாக தீ மள மளவென பரவி அருகில் உள்ள நிலங்களிலும் தீப்பிடித்து  வானை முட்டும் அளவிற்கு கரும் புகை சூழ்ந்தது. 

மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் இதுகுறித்து, தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர்  தீயணைப்பு வாகனத்தை உள்ளே கொண்டு செல்ல பாதையில்லாமல் சாலையிலே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள மரக்கிளைகளை கொண்டு மற்றும் கோணிச் சாக்குகளில் தண்ணீரை நனைத்து தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

பின்னர், மாநகராட்சி தண்ணீர் டிராக்டர் வண்டியில் வரவழைக்கப்பட்டு தற்காலிக மோட்டர் மூலமாக தண்ணீர் வண்டியில் இருந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.

மதுரை விமான நிலையத்திற்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளைக்கல் பகுதியில் தீ பற்றி வானை முட்டும் அளவிற்கு புகை சூழ்ந்ததால்,

 மதுரை விமான நிலையத்திற்கு சொல்லும் விமானம் பாதை என்பதால் தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.