June 30, 2025
புதுச்சேரி  தவளக்குப்பம் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை சபாநாயகர்  செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி  தவளக்குப்பம் புதிய தார் சாலை மற்றும் வடிகால் பணிகளை சபாநாயகர்  செல்வம் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி ஜூன் 19

புதுச்சேரி மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள லலிதா நகர் பகுதியில் கழிவு நீர் வடிகால் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் கழிவு நீரை வெளியேற்றுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால் வசதி மற்றும் தார் சாலை அமைத்து  தரவேண்டும் என அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான செல்வம்.ஆர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். 

 சட்டப்பேரவைத் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுத்து முதல் கட்டமாக லலிதா நகர் பிரதான சாலை மற்றும் சில குறுக்கு வீதிகளில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை வசதிகளை ஏற்படுத்தி தந்தார்.

பின்னர் லலிதா நகரில் விடுபட்ட வீதிகளுக்கும் கழிவு நீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து  நியமன சட்டமன்ற உறுப்பினர் திரு ஆர் பி அசோக் பாபு அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 39.81 லட்சம் பெற்று  அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் பணிகளை தொடங்க அரசாணை பெற்றார்.

இதன்படி இப்பணிகளை துவங்கும் பணிகளுக்கான பூமி பூஜை சட்டப்பேரவை தலைவர் செல்வம்.ஆர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆர்பி .அசோக்பாபு ஆகியோர்  முன்னிலையில்  லலிதா நகர் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவிப் பொறியாளர் நாகராஜ் இளநிலை பொறியாளர் அகிலன் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் சுகுமாரன்  தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மாவட்ட துணை தலைவர் மணி   உள்ளிட்ட  அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் செல்வம் கபிலன் சக்திவேல் கீர்த்திவாசன் மற்றும் அப்பகுதி பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் புதிய தார் சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த சட்டப்பேரவை தலைவர் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.