June 30, 2025
மாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

மாரியம்மன் கோயில் விழாவில் தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

சோழவந்தான்:

மதுரை, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில், வைகாசி திருவிழா 13 ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு, வடக்கு ரத வீதி வேளாளர் வெள்ளாளர் உறவின்முறை சார்பில், 500-க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு, சோழவந்தான் வடக்கு ரத வீதி வேளாளர் உறவின்முறை சார்பாக சார்பாக 500க்கும் மேற்பட்ட பெண்கள் வைகை ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து, ஜெனகை மாரியம்மன்க்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவு அருந்தி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.