
மாணவருக்கு புத்தகம் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அரசு பள்ளி ஆசிரியர்கள்
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் இசக்கிமுத்து. இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு தனது வகுப்பு ஆசிரியரும் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி, வரலாறு ஆசிரியர் திரு. தனுஷ்கோடி ஆகியோரிடம் தனது பிறந்தநாள் செய்தியை கூறி ஆசிரியரிடம் வாழ்த்து பெற்றார் மாணவருக்கு ஆசிரியர்கள் புத்தகம் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்






