June 8, 2025
ஓம் சக்தி நகர் முத்துமாரி அம்மன் கோவிலில் 32 ம் ஆண்டு வைகாசி திருவிழா

ஓம் சக்தி நகர் முத்துமாரி அம்மன் கோவிலில் 32 ம் ஆண்டு வைகாசி திருவிழா

மதுரை:

தமிழகத்தில் உள்ள எல்லா கோயில்களிலுமே ஒவ்வொரு மாதத்திலும் ஒரு திருவிழா, முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். மதுரை அருள்மிகு ஓம் சக்தி நகர் முத்துமாரியம்மன் கோயிலில் நடக்கும் வைகாசி திருவிழா மிகவும் பிரசித்தமானது.

முத்துமாரி அம்மன் கோவிலில் நடந்து வரும் வைகாசி திருவிழாவை யொட்டி , நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மதுரை திருப்பரங்குன்றம் அருகே, ஓம் சக்தி நகரில் உள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் பிரசித்தி பெற்ற திருக்கோவிலின் 32-ம் ஆண்டு வைகாசி திருவிழா மே.27 ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெயில் உகந்த அம்மன் கோவில் இருந்து சக்தி கரகம் மற்றும் தீச்சட்டி எடுத்தல் இன்று மாலை 7 மணிக்கு தொடங்கியது, நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

திருவிழாவில் அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, ஆடல் பாடல்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.