
பழனி அருகே ஆயக்குடியில் காளியம்மன் கோயில் சாவியை வைத்து இஸ்லாமியர்கள் துவா..
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பழைய ஆயக்குடியில் அமைந்துள்ளது காளியம்மன் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன.
இக்கோயில் திருவிழா தொடங்கும் முன்பே திருக்கோயிலின் சாவியை அதே பகுதியில் உள்ள மஸ்ஜிதே அக்ஸா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் சாவியை ஒப்படைத்து விடுகின்றனர்.
இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகத்தின் மூலம் சாவியை வைத்து சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு துவா ஓதி சாவியை திருக்கோயில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்து திருவிழா நடத்தப்பட்டு வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இஸ்லாமியர்களின் முன்னுரிமையை ஏற்று திருக்கோயில் திருவிழா வெகு விமர்சையாக மத நல்லிணக்க அடிப்படையில் நடத்தப்பட்டு வருவது அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இஸ்லாமியர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர் இதே போல் திருக்கோயில் நிர்வாகத்தினர் இஸ்லாமியர்களுக்கு மரியாதைகள் செய்யப்பட்டு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருவிழா நடைபெற்று வருகின்றன