June 8, 2025
விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்.

விபூதி என்றால் ஐஸ்வர்யம் என்று பொருள்.

விபூதி என்னும் சொல்லுக்கு மகிமை என்றும் பொருள்,

விபூதி திருநீறு என்றும் அழைக்கப்படும். சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் தங்கள் நெற்றியில் தரித்துக்கொள்வது திருநீறு. விபூதி தரித்துக்கொள்வதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

மேலும், ஒருவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் முடிவில் பிடி சாம்பல்தான் என்ற தத்துவத்தையும் நமக்கு உணர்த்துவதாகத் திகழ்கிறது.

உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன…!

அவை இங்கே

1.தலை நடுவில் (உச்சி)
2.நெற்றி
3.மார்பு
4.தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5.இடது தோள்
6.வலது தோள்
7.இடது கையின் நடுவில்
8.வலது கையின் நடுவில்
9.இடது மணிக்கட்டு
10.வலது மணிக்கட்டு
11.இடது இடுப்பு
12.வலது இடுப்பு
13.இடது கால் நடுவில்
14.வலது கால் நடுவில்
15.முதுகுக்குக் கீழ்
16.கழுத்து முழுவதும்
17.வலது காதில் ஒரு பொட்டு
18.இடது காதில் ஒரு பொட்டு

பலன்கள் :

திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்…!!!

“கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே!”

திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.