June 8, 2025
மதுரையில் பஞ்சமி விழா.

மதுரையில் பஞ்சமி விழா.

மதுரை:

மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகரில் அமைந்துள்ள சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் வளர்பிறை பஞ்சமி விழா நடைபெற்றது. விழாவையொட்டி, இக் கோயிலில் அமைந்துள்ள வராஹி அம்மனுக்கு, பக்தர்களால் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இதில் கோயில் செயலாளர் ராமச்சந்திரன், ஆன்மீகக் பெண்கள் குழுவினர் விஜயராணி, ராணி, ராம சுந்தரி, அமுதா, சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.