
உப்பளம் தொகுதியில் இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் திட்டம்.
புதுச்சேரி மே-30
புதுச்சேரி: உப்பளம் தொகுதியில் உள்ள ஆட்டுப்பட்டி, நேதாஜி நகர் மற்றும் ரோடியர்ப்பேட் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களுக்கு இலவச மனைப்பட்டா அல்லது அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கும் திட்டத்தை சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் முயற்சியால் அரசு செயல்படுத்தவுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக உப்பளம் தொகுதி எம்எல்ஏ அனிபால் கென்னடி தொடர்ந்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் வலியுறுத்தி, பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, மக்களுக்கு நில உரிமை மனை பட்டா பெற்றுத் தர அரசின் உறுதிமொழியை பெற்றுள்ளார்.
தற்போது, ஆதிதிராவிடர் நலத்துறையின் சிறப்புக் கூறு நிதியின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்த ஏற்பாடுகள் சட்ட மன்ற உறுப்பினரால் தொடங்கியுள்ளன. அதற்கான முதல் கட்டமாக, துறை இயக்குநர் இளங்கோவனை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்திய எம்எல்ஏ அனிபால் கென்னடி, அரசு நேரடியாக நிலங்களை கைப்பற்ற வேண்டியதையும், உரிமையாளர்களுக்கு மாற்றாக நிதி வழங்கப்படலாம் என்றும் வலியுறுத்தினார்.
இதற்கு ஆதரவளித்து, இயக்குநர் திட்டம் நடைமுறைக்கு வரும் உறுதியை வழங்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, நில உரிமையாளர்களை நேரடியாக இயக்குநர் முன்னிலையில் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அரசு நிலைமதிப்பில் இடங்களை ஒப்படைக்கும் வகையில் ஒப்பந்தம் செய்தார். அதாவது இந்த ஒப்பந்தம் உரிமையாளர் சொந்த நிலத்தை அரசு கொள்முதல் செய்யும்போது, அந்த நிலத்திற்கு அரசு உரிமையாளருக்கு வழங்கும் விலை ஆகும்.
பல ஆண்டுகளாக நில உரிமைக்காக காத்திருந்த மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய நிம்மதியாகும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தெரிவித்தார். உடன் தொகுதி துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர் காலப்பன், இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.