June 8, 2025
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முன்னாள் மாணவரின் குழந்தைகளுக்கு ஆசிரியர் நேரில் சென்று பாராட்டு

பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற முன்னாள் மாணவரின் குழந்தைகளுக்கு ஆசிரியர் நேரில் சென்று பாராட்டு

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் பயின்று தற்போது மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் உறுப்பினராக உள்ள திரு நைனா முகமது அவர்களின் இரு குழந்தைகள் நடைபெற்று முடிந்த அரசு பொதுத்தேர்வுகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் சிறப்பான மதிப்பெண்களை பெற்றனர் இந்த இரு மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி மற்றும் முன்னாள் மாணவர் தேவேந்திரன் ஆகியோர் நேரில் சென்று பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்ற அவ்விரு மாணவர்களுக்கும் பொன்னாடை அணிவித்து இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வின் போது மாணவர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.