
பெரியகுளம் நகராட்சி நகர் மன்ற கூட்டம் பேரீச்சம் ஏரி மற்றும் பெரியகுளம் :ஜெயராஜ் அன்னபாக்கியம் மகப்பேறு மருத்துவமனையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ள தீர்மானம்.
தேனிமாவட்டம் பெரியகுளம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் தமிகா சுல்தானா, பொறியாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பெரியகுளம் நகர் பகுதியில் மேற்கொள்ளப் பட உள்ள வளர்ச்சி பணிகள்குறித்து விவாதிக்கப்பட்டது மேலும் பெரியகுளம் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய பேரீச்சம் ஏரிபகுதியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளுதல் மேலும் பேரிச்சம் நேரில் இருந்து பெரியகுளம் நகராட்சி உள்ள உரிமையை நிலை நாட்ட நடவடிக்கை மேற்கொள்ளுதல் , பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகப்பேறு மருத்துவமனை சாலை மட்டத்திலிருந்து தாழ்வாக இருப்பதால் மழை காலங்களில் மழை நீர் மகப்பேறு மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்து கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் பாதிப்பு ஏற்படுகின்றன.
மேலும் கட்டிடம் உறுதி தன்மை இழந்து வருவதால் தற்போது செயல்பட்டு வரும் மகப்பேறு மருத்துவமனையே புதிய கட்டிடத்தில் இடமாற்றம் செய்துவிட்டு,பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அவ்விடத்தில் புதிய மகப்பேறு மருத்துவமனை கட்டுதல் உட்பட 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் கூட்டத்தில் 16-வது வார்டு உறுப்பினர் கிஷோர்பானு நூர்முகமது தண்டுப்பாளையம் பகுதியில் கிருமி தொற்று உள்ள நோய்பாதிப்பிற்கு ஆளான நாய்கள் மற்றும் மாடுகள் தெருக்களில் அதிக அளவில் சுற்றி திரிவதால் சிறிவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.