
சுற்றுப்புற சூழல் குறித்த கருத்தரங்கு மற்றும் மரம் நடு விழா
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சுற்றுப்புற சூழல் குறித்த கருத்தரங்கு மற்றும் மரம் நடு விழா நடைபெற்றது.

தாவர இன பாதுகாப்பு பெட்டகம் மற்றும் மண் வள பாதுகாப்பு பற்றிய முக்கியத்துவம் மற்றும்
விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர்.ஜே.இராஜங்கம் இவ்விழாவினை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழ்நாட்டில் முதன்மையாக தோட்டக்கலைப் பயிர்கள் ஆராய்ச்சியில் இக்கல்லூரியில் சுமார் 1380 வகை தாவர இன தொகுப்பு பராமரிக்கபட்டு வருவதாகவும், குறிப்பாக பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியப் பயிர்கள், மலர்கள் மற்றும் மருத்துவ பயிர்கள் இதில் அடங்கும் என தெரிவித்தார்.
இதன் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு 27 இரகங்கள் மற்றும் 52 தொழில் நுட்பங்கள் வெளியிடப்பட்டு விவசாய நலனுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சுற்றுப்புற பாதுகாப்பு பற்றிய சிறப்பு கவனம் பெற இக்கல்லூரியில் 1500 மரங்கள், 1.5 கி.மீ
தொலை தூரத்தில் நடவு செய்யப்பட்டது. குறிப்பாக, இயற்கை மனம் கமிழும், மகிழ மரம் மற்றும் வைட்டமின் ‘சி’ சத்து (2000 IU) நிறைந்த மேற்கு இந்திய செரி மரக் கன்றுகள்
“ப்பிளாசம் அவின்யூ” என்ற பெயரில் நடப்பட்டுள்ளது. இச்சிறப்பு நிகழ்ச்சியை மாணவ மன்ற
ஆலோசகர் முனைவர் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்து வாழ்த்துரை வழங்கினார்.
மேலும், முனைவர். முத்துலெட்சுமி, முனைவர். பிரபு மற்றும் முனைவர். நாகேஸ்வரி
கலந்துகொண்டு தாவர பாதுகாப்பு பெட்டகத்தின் முக்கியத்துவம், பயன்பாடு, வருங்காலத்தில்
சுற்றுப்புற சூழல் மற்றும் வானிலை மாற்றத்தின் விளைவை மேற்கொள்ளுதல் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.
இவ்விழாவில டாக்டர். செல்வராஜ், மருத்துவர், பாஸ்கரன் மற்றும் மணிகார்த்திக், ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர். அனிதா நன்றி கூறினார்.