June 8, 2025
மதுரை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

மதுரை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு

அலங்காநல்லூர், மே.21-

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் பொதும்பு அதலை ஊராட்சிகளில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மேற்கு(தெற்கு) ஒன்றிய கழக செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் தண்டரை மனோகரன் சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏக்கள் கருப்பையா, மாணிக்கம், மகேந்திரன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ், செல்லம்பட்டி ராஜா, அம்மா பேரவை நிர்வாகிகள் வாடிப்பட்டி ராஜேஷ் கண்ணா, துரை தன்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம், முன்னாள் கூட்டுறவு தலைவர் மலர் கண்ணன், பொதும்பு கிளை செயலாளர் ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சமயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்டப்புலி நகர், அரியூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.