
மதுரை:
மதுரை வலையன் குளத்தில் வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
மேற்கூரை சுவர் இடிந்து மூன்று பேர் பலியான விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

நிலையில், விபத்தில் பலியான வெங்கட்டி. வீரமணி மற்றும் அம்மா பொண்ணு ஆகியோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் வழங்கிய வணிகம் வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்தார்.
பலியான குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு தமிழ அரசின் இழப்பீடு தொகையாக தலா ரூபாய் 4 லட்சம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா,
திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் சிவஜோதி மற்றும் அதிகாரிகள் பலியானவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கினர் ஆறுதல் தெரிவித்தனர்.