June 9, 2025
அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிர்ச்சாரம் வழங்கினர்.

அழகர்கோவில் கோட்டை வாசல் பகுதியில் அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிர்ச்சாரம் வழங்கினர்.

அலங்காநல்லூர்,

அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி ஆணைப்படி யும், மாநில அம்மா பேரவை செயலாளர் சட்ட மன்ற எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படியும், மதுரை புற நகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி. வி. ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, ஆலோசனைப்படியும், மதுரை புற நகர் கிழக்கு மாவட்டம் அம்மா பேரவை சார்பில் மேலூர் தொகுதி வடக்கு ஒன்றிய கழகதிற்க்கு உட்பட்ட வலையபட்டி ஊராட்சி அழகர் கோவில் கோட்டை வாசலில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் தலைமையில் திண்ணைப் பிரச்சாரம் செய்து, பொது மக்களுக்கு துண்டு பிரச்சாரங்களை அதிமுகவினர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மேலூர் தொகுதி எம்எல்ஏ பி.பெரிய புள்ளான் (எ) செல்வம் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் பொன் ராஜேந்திரன், பொன்னுச்சாமி, வெற்றிச் செழியன், கழக பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், அமைப்புச்சாரா அணி அன்புச் செல்வம், நகர் மன்ற உறுப்பினர் திவாகர் , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்டம் ஒன்றியம் நகர் கழக நிர்வாகிகள், கிழை கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.