
பழனியில் கஞ்சா விற்பனை செய்த எட்டு பேர் கைது- இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.
பழனி திண்டுக்கல் சாலையில் பழனியாண்டவர் ஆண்கள் கல்லூரி அருகே போலீசார் இன்று வழக்கமான ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த எட்டு பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
முன்னுக்குப் பின் முரணாக போலீசாரிடம் தகவல் தெரிவித்ததால் எட்டு பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். போலீசாரின் விசாரணையில் புளியம்பட்டியை சேர்ந்த மாதவன், பழனியைச் சேர்ந்த சந்துரு, அஜய்குமார், நாகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேரும் கஞ்சா விற்பனை செய்துவந்ததும், கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ய காத்திருந்ததும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்காக பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட எட்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.