
ஸ்ரீபெரும்புதூரில்-நான் முதல்வன் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று சிறப்புரை
ஸ்ரீபெரும்புதூர்: மே-16
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் கல்விக் கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமை ஏற்று சிறப்பு உரையாற்றினார்
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14/5/2025 அன்று சென்னையில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டும் “கல்லூரி கனவு நிகழ்ச்சி” துவங்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் இஆப அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்
பள்ளி மாணவ மாணவியர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ,மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கோமதி, மாவட்ட கல்வி அலுவலர் தனியார் மகாலட்சுமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் எழில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வெங்கடேசன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி ,நான் முதல்வன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மரியம்,உள்ளிட்ட. மாவட்ட ஒன்றிய ஊராட்சி அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது