June 9, 2025
கள்ளிக்குடியில் மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக சார்பாக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளிக்குடியில் மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் திமுக சார்பாக நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

திருமங்கலம்,மே.13 ,

தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கள்ளிக்குடியில் தெற்கு ஒன்றியம் சார்பாக எஸ்.பி .நத்தம் கிராமத்தில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்திற்கு,
ஒன்றியச் செயலாளர் மதன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழகத்தில் இந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளைப் புரிந்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அறிவித்த 556 வாக்குறுதிகளை 95 சதவீதம் நிறைவேற்றி விட்டார்.

அரசு பஸ் பள்ளி மாண மாணவியர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், மக்களை தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளார்.

நாளை தேர்தல் வருகிறது என்பதற்காக வாக்கு கேட்டு உங்களைத் தேடி வரவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை கூறவந்துள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதிகளில் எம்எல்ஏவாக இருக்கும் உதயகுமார் கப்பலூர் டோல்கேட்க அகற்றி இருக்கலாம் அதனை விடுத்து டோல்கேட் அகற்றக் கோரி மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

என்றுமே மக்களுடன் இருப்பது திமுகவினர் தான் இந்தக் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அலாவுதீன், எழும்பூர் கோபி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதி மூலம், சிவ முருகன், நகரச் செயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் விமல், ஆதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.