June 9, 2025
வடுகபட்டியில் இ.பி.எஸ் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் வள்ளலார் சத்ய ஞான சபையில் அன்னதானம் நிகழ்ச்சி

வடுகபட்டியில் இ.பி.எஸ் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் வள்ளலார் சத்ய ஞான சபையில் அன்னதானம் நிகழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிச்சாமியின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் சத்ய ஞான சபையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்னபிரகாஷ், ராஜகுரு, நகர செயலாளர்கள் பழனியப்பன், கிருஷ்ணகுமார், பேரூர் செயலாளர்கள் வடுகபட்டி பாலமுருகன், தாமரைக்குளம் மனோகரன், தென்கரை ஆண்டவர், தாமரைக்குளம் பேரூராட்சி முன்னாள் சேர்மன் இராமதண்டபாணி, மாவட்ட இணைச்செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் பங்கஜவள்ளி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.