June 9, 2025
மதுரையில் இறந்த பெண்ணிற்கு தவறான இறப்பு சான்றிதழ்: டி.ஆர்.ஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு

மதுரையில் இறந்த பெண்ணிற்கு தவறான இறப்பு சான்றிதழ்: டி.ஆர்.ஓ மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டரிடம் மனு

மதுரையில் தனது தாய் வழி பாட்டிக்கு தவறான இறப்புச் சான்றிதழ் வழங்கிய டி.ஆர்.ஓ மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரிடம் ஜான் என்பவர் மனு அளித்துள்ளார்.


‌ ‌ இது பற்றி ஜான் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நான் மதுரை பாக்கியநாதபுரம் அசோக்நகர் 5வது தெருவில் (கதவு எண்: 12/2) வசித்து வருகிறேன், எனது தந்தையின் பெயர் பால்சாமி. எனது தாய் வழி பாட்டியான மூக்கம்மாள் என்பவர் 26.04.1970 இல் இறந்தார். அதற்கான இறப்புச் சான்றிதழை கோவிலாங்குளம் வி.ஏ.ஓ மற்றும் கருமாத்தூர் வருவாய் அலுவலர் ஆகியோர் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் உசிலம்பட்டி வட்டாட்சியர் என் பாட்டியின் இறப்பு பதிவாகவில்லை என சான்று அளித்துள்ளார். ஆனால் என் பாட்டி மூக்கம்மாள், ஆத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 880/ 1969வது ஆண்டில் 23,04.1969 இன் படி சொத்தை ஒத்தி வைத்ததற்கான பதிவு உள்ளது. ஆனால் வில்லங்க சான்றில் மேற்படி ஒத்தி ரத்து பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஒத்தியை திருப்பாமலே எதிர்மனுதாரர்கள் என் பாட்டி 1975இல் கிரயம் செய்ததாக பொய்யான தகவல் உள்ளது. மேலும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, என்னுடைய ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் பரிசளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ டி.ஆர்.ஓ.க்கு உத்தரவிட்டுள்ளது.


‌ இந்த சூழலில் நீதிமன்ற ஆணையை மதிக்காமலும் வி.ஏ.ஓ மற்றும் வருவாய் ஆய்வாளர் அறிக்கை வட்டாட்சியர் சான்றிதழ் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும் எதிர் மனுதாரர்களுக்கு சாதகமாக செயல்பட்டு, டிஆர்ஓ எனது பாட்டி மூக்கமாளுக்கு இறப்புச் சான்று பெற தடையாக இருந்துள்ளார். எனவே என்னுடைய ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து மாவட்ட வருவாய் அலுவலரின் தவறான நடவடிக்கையை ரத்து செய்து, என் பாட்டிக்கு சரியான இறப்புச் சான்றிதழ் வழங்க ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.