June 8, 2025
புதுச்சேரி சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி பூமி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி சுனாமி நினைவிடம் அமைக்கும் பணி பூமி பூஜை நடைபெற்றது.

புதுச்சேரி உப்பளம் தொகுதி பாண்டி மெரினா அருகிலுள்ள வம்பாகீரப்பாளையம் கிராமத்தில் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட்ட சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக, சுனாமி நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது அமைக்கும் பணி பூமி பூஜை செய்து சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நினைவிடம் ரூ.40 லட்சம் மதிப்பில் மதிப்பீடு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டது. ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு, திரு. G. மெய்பாலன் ஒப்பந்ததாரருக்கு ரூ.24.05 இலட்சம் மதிப்பில் பணி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான பூமி பூஜை காலை அனிபால் கென்னடி, சட்டமன்ற உறுப்பினர் (உப்பளம் தொகுதி) தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் திரு. K. வீரசெல்வம், மீன்வளத்துறை இயக்குனர் திரு. A. முகமது இஸ்மாயில், செயற்பொறியாளர் திரு. S. சந்திரகுமார், உதவிப் பொறியாளர் திரு. R. கோபி, இளநிலைப் பொறியாளர் திரு. S. பிரபாகர் ஆகியோர் மற்றும் ஒப்பந்ததாரர், மீனவ சங்க பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்த நினைவிடம் அமைக்க சட்டமன்றத்தில் தொடர்ந்து பலமுறை கேள்வி எழுப்பி, மாண்புமிகு முதலமைச்சர் மற்றும் துறை அமைச்சர்களிடம் நேரில் சந்தித்து மனுக்கள் அளித்து, நிலைபெற செய்ததில் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் V. அனிபால் கென்னடி அவர்களின் துரித முயற்சி குறிப்பிடத்தக்கது.

இத்திட்டம் நிறைவேறியதில் நீண்டநாள் எதிர்பார்த்த மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சட்ட மன்ற உறுப்பினருக்கு மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் சால்வை அணிவித்து பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.