
விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 113 ஆம் நூற்றாண்டு விழா
சோழவந்தான் ஏப்ரல் 5
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 113ஆம்நூற்றாண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் மாணவர் சட்ட ஆலோசகர் ஜெகதீசன் தலைமை தாங்கினார்.
செல்லம்பட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை ஆசிரியர் பாண்டியன் முன்னால் மாணவர்கள் அன்பழகன் பாண்டியன் சின்ன பாண்டி தனபாண்டி மாசிலாமணி சிங்கம் ஞானசேகர் செல்வகுமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நூற்றாண்டு விழாவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டது முன்னதாக நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை மற்றும் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியை மேகலா நிகழ்ச்சி தொடர் நேரலையை உதவி ஆசிரியை நேசமலர் ஆகியோர் வழங்கினர் ஜெயமாலா நன்றி கூறினார்.