June 8, 2025
100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: சில்வார்பட்டி ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மனு

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு: சில்வார்பட்டி ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக ஒன்றிய துணைச் செயலாளர் மனு

தேனி ஏப்.04

தேனி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன் அவர்களிடம் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கிடாசலம் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர் வீரபத்திரன் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அதாவது 100 நாள் வேலை திட்டத்தில் ஆட்களை பயன்படுத்தாமல் ஜே.சி.பி. போன்ற கனரக வாகனத்தை பயன்படுத்தி அதிக அளவில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் செயலரின் மகன், ஊராட்சி அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் நபர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பெயரில் பணிகள் நடைபெற்றதாக பொய்யாக கணக்கு எழுதி போலி பில் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், சில்வார்பட்டி ஊராட்சியில் வாட்டர்மேனாக பணிபுரிந்து வருபவர் தனது வயது ஆவணத்தை திருத்தம் செய்து தொடர்ந்து பணியாற்றி ஓய்வு பெற்ற வயதிலும் 60 வயதை கடந்தும் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருவதாகவும், ஊராட்சி செயலர் உதவியுடன் இவைகளை நடந்துள்ளதாகவும் குற்றம்சாட்டி, ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கிடாசலம் குறிப்பீட்டிருந்தார். மேலும் மனுவை பெற்ற ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) முத்துமாதவன் ஊராட்சி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.