
சோழவந்தானில் 60 ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் திறப்பு விழா
சோழவந்தான், மார்ச் :26.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பெரிய கடை வீதியில் ஆண்டியப்ப முதலியார் நினைவாக தொடர்ந்து 60ஆம் ஆண்டாக நீர்மோர் பானகரம் வழங்கப்பட்டு வருகிறது.

சோழவந்தான் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரொட்டிக்கடை முருகேசன் துவக்கி வைத்தார். வர்த்தக சங்கம் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். ஆண்டியப்பன் வரவேற்றார். சோழவந்தானில் கோடை காலத்தை கருத்தில் கொண்டு வெயிலின் கொடூரத்தை சமாளிக்க முதன்முதலாக நீர் மோர் பந்தல் திறந்ததை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். இதில் செந்தமிழன், தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.