
நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையில் உள்ள பா. ஜனதா கட்சி நிர்வாகிகள் சந்திப்பு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாவட்ட மகளிர் அணி குற்றச்சாட்டு
திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர்கள் மல்லிகா, உமாமகேஸ்வரி ஆகிய 2 பேர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவுப்படி திண்டுக்கல் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் தமிழக முதலமைச்சரின் உருவப் படத்தை ஒட்டினார்கள். இதனை போலீசார் அறிந்து மல்லிகா,உமா மகேஸ்வரி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து திண்டுக்கல் நீதிமன்ற உத்தரவுப்படி நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
2 பேர்களுக்கும் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலைக்கு திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி தலைவர் வினோதினி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் பார்க்கச் சென்றனர்.
அங்கு சிறைச்சாலையில் உள்ள மல்லிகா உமா மகேஸ்வரி ஆகிய 2 பேர்களையும் விசாரித்து பின்னர் வெளியே வந்த மாவட்ட மகளிர் அணி தலைவர் வினோதினி கூறியதாவது:-
தமிழகத்தில் டாஸ்மார்க் மது விற்பனையால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் பல தாய்மார்கள் விதவைகளாகவும், குழந்தைகளோடு மிகவும் பரிதாபத்திற்கான சூழ்நிலையில் இருப்பதை பார்த்து இது போன்ற போராட்டங்களை நடத்தினார்கள். மதுக்கடை அடைப்பதை விட்டு விட்டு மதுக்கடை முன்பு போராட்டம் நடத்தியவர்களை சிறையில் வைத்து வேடிக்கை பார்ப்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 92 பெண்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் மதுக்கடை முன்பு பிரச்சாரம் செய்தவர்கள். அதில் தூத்துக்குடி, திண்டுக்கல் பகுதிகள் மட்டும் கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணைய கிடைக்காம சிறையில் இருக்கிறார்கள்.
இது போன்ற கொடுமை தமிழ்நாட்டுல நடந்துகிட்டு இருக்கு பாரதி கண்ட விடுதலை பெண்களாக அகிம்சை வழியில் போராட்டம் நடத்திய பெண்களை கைது செய்து 5 நாட்கள் சிறையில் வைத்திருப்பது எந்த அளவுக்கு கொடுமை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களை சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகளுக்குப் பின்பு வெட்கி தலை குனிய வேண்டிய பெண்களுக்காக பெண் குரல் கொடுக்க உரிமை இல்லையா? தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண்களை வீர மங்கைகள் என்று தான் இனி வரும் காலங்களில் நாங்கள் அழைப்போம் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறி இருக்கிறார்.
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று தமிழ்நாட்டு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் லட்சுமணன்,முன்னாள் ஒன்றிய தலைவர் ராமகிருஷ்ணன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தன், மாநில நிர்வாகிகள் அழகு மணி, அம்சு, பாண்டி ,சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.