June 9, 2025
நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் உலக பெண்கள் தினம்

நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரியில் உலக பெண்கள் தினம்

மார்ச். 21- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் அணைப்பட்டி வைகை அறக்கட்டளையும், சைல்டு வாய்ஸ் இணைந்து ஐக்கிய நாடுகள் சபையின் சமூக நல்லிணக்க பேரவையுடன் ஒருங்கிணைந்து உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையில் நடைபெற்றது.

கல்லூரி நாட்டு நல பணித்திட்ட அமைப்பாளர் பேராசிரியர் தீபா முன்னிலை வைத்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் சமூக நல்லிணக்க பேரவையின் தெற்காசிய செயலாளர் முனைவர் ஆப்ரகாம் கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில் பேசியதாவது:- சமூக நல்லிணக்கம் என்ற சூழலில் எவ்வாறு அவசியம் என்பதையும், மதம் ,ஜாதி ,இனம் ,மொழி கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாகவும், ஒருங்கிணைப்பாகவும், அமைதியாகவும் செயல்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

இவ்விழாவில் இந்தியாவின் செயலாளர் மத்தைய குட்டி, சைல்ட் வாய்ஸ் இயக்குனர் அண்ணாதுரை, தமிழக ஐக்கிய நாடுகள் சபையின் சமூக நல்லிணக்க பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ராதாபாய்,சைல்டு வாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் தாரணி,சைல்ட் வாய்ஸ் திட்ட மேலாளர் நெல்சன் சந்திரசேகர், ஒருங்கிணைப்பாளர்கள் விசாலினி,சாரதா, இந்திரா மற்றும் கல்லூரி மாணவர்கள் பட பல கலந்து கொண்டு மரக்கன்று கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.