June 8, 2025
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில், நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஆட்டோ வாகனங்கள் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மாவட்டம், திருப்பாலை, இ.எம்.ஜி. யாதவா மகளிர் கலைக் கல்லூரியில், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

மாவட்ட ஆட்சித் தலைவர் மா.செள.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் , சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன், ஆகியோர்  உடன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.