May 17, 2025
தென்காசி: திருநங்கை கொலையில் 2 திருநங்கைகள் கைது.இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு.

தென்காசி: திருநங்கை கொலையில் 2 திருநங்கைகள் கைது.இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் திடுக்கிடும் தகவல்களால் பரபரப்பு.

ஆலங்குளம்-ராம்நகர் அடுத்த குத்தப்பாஞ்சான் அருகே ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்பியவருக்கு மருத்துவ உபகரணங்கள் இன்றி ஆணுறுப்பு அறுவை சிகிச்சை செய்ததால் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு.

இதைதொடர்ந்து இந்த அறுவை சிகிச்சையை மருத்துவ உபகரணங்கள் இன்றி சிகிச்சை செய்த 2 திருநங்கைகள் கைது.தென்காசி மாவட்டம் ஆலங்குளம்-அம்பாசமுத்திரம் செல்லும் சாலை ராம்நகர் மேற்கு பகுதியில் உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி,கடையம் காவல்நிலையத்திற்குட்பட்ட பரும்பு ஜேஜே நகரில் சுமார் 20-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.இவர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர்குளத்தை சேர்ந்த சங்கரபாண்டி மகன் சிவாஜிகணேசன் என்ற சைலு (32) என்பவர் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தார் என்பது தெரியவருகிறது.

இவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுவதற்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிவாஜிகணேசன் என்ற சைலுவை சில திருநங்கைகள் ரத்தவெள்ளத்தில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதித்து இருக்கின்றனர். ஆனால்,சைலு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகவல் அறிந்த கடையம் போலீசார் ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்தனர்.மேலும்,சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கடையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன அதில் பரும்பு பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் மதுமிதா, மகாலெட்சுமி ஆகியோர் ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்புபவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் இன்றி, ஆணுறுப்பை அறுவை சிகிச்சை செய்பவர்கள் எனவும், சிவாஜிகணேசன் என்ற சைலுவுக்கு அறுவை சிகிச்சை மேற்க்கொண்டபோது அதிக ரத்த போக்கு காரணமாக உயிரிழந்ததும் தெரிய வந்த நிலையில் திருநங்கைகள் மதுமிதா, மகாலெட்சுமி இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் பற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் ஆணாக இருந்து திருநங்கையாக மாற விரும்புபவர்கள் அவர்களுடைய சுய விருப்பம் அல்லது அவரவர்கள் சூழ்நிலை இருந்தாலும், மருத்துவர்கள் பார்வையின்றியும்,மருத்துவ உபகரணங்கள் இன்றியும் சிகிச்சை மேற்கொள்வது என்பது கண்டிக்கதக்கது.

திருநங்கையாக மாற்றம் ஏற்படுத்துவதற்கு அவர்களாகவே சிகிச்சை மேற்கொள்வது என்பது தொடர்கதையாகி வரும் நிலையில் இது போன்று நடக்கும் சம்பவங்களை தடுத்து நிறுத்த காவல்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளையும் ஒன்றினைத்து ஒரே இடத்திற்கு வரவழைத்து அல்லது மாவட்டத்தில் உள்ள வட்டம் வாரியாக ஒரே இடத்திற்கு வரவழைத்து, மருத்துவமனை சிகிச்சை இல்லாமல் தாங்களாகவே மருத்துவ உபகரணங்கள் இன்றி சிகிச்சை அளித்தல் என்பது தவறு.

இனி இது போன்ற சம்பவங்களில் இனி ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டைனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள் என எச்சரிக்கை விடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.