
மார்ச் 8 .2025 .மகளிர் தினத்தின் வரலாறு
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) கூற்றுப்படி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர் இயக்கங்களின் செயல்பாடுகளில் இருந்து சர்வதேச மகளிர் தினம் தோன்றி இருக்கிறது. 1908 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த ஆடைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தின் நினைவாக 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவில் முதல் தேசிய மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டது. அப்போது பெண்கள் கடுமையான வேலை சூழலுக்கு எதிராக போராடினர்.
1945ல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை உறுதிப்படுத்தும் முதல் சர்வதேச ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பின்னர் மார்ச் 8, 1975 அதிகாரப்பூர்வமாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. 1977ல் ஐநா பொதுச் சபையின் தீர்மானத்தை ஏற்று சர்வதேச மகளிர் தினம் ஒரு உலகளாவிய விடுமுறையாக மாறியது.
மகளிர் தினத்தின் முக்கியத்துவம் பெண்களின் கலாச்சார, அரசியல், சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலினச் சார்பு மற்றும் பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டு வந்து பாலின சமத்துவத்தை அடைவதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் வாய்ப்பாக இந்த நாள் அமைகிறது.
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமத்துவமின்மை, பாலின அடிப்படையிலான வன்முறை, கல்வி மற்றும் வரையறுக்கப்பட்ட பொருளாதார வாய்ப்புகள் போன்றவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மகளிர் தினம் சிறந்த அடித்தளமாகும். பாலின சமத்துவத்தை ஊக்குவித்து, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் தீர்வுகளை நோக்கிச் செயல்படுவதற்கும், ஏற்படுத்த வேண்டியை முன்னேற்ற பாதைகள் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கும் இது சரியான தருணமாகும். அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
இப்படிக்கு திருமதி லீனா மாணிக்கம் X Nursing superintendent