
பழனியை வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் மாநில பொது செயலாளர் கோரிக்கை...
திண்டுக்கல் மாவட்டம் பழனி தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தலைமை அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவன தலைவர் திருமாறன் ஜி அறிவுரைத்தலின்படி மாநில பொது செயலாளர் சபரி தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வில் பழனியை வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.
பழனி அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக திகழ்ந்து வருகிறது நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் ஆன்மீக நகரமாக பழனி விளங்கி வருகின்றது.
தென்னிந்தியாவின் இரண்டாவது பெரும் விவசாய பகுதியாக பழனி காணப்பட்டு வருகின்றன. தொப்பம்பட்டி ஒன்றியம் மிகப்பெரிய ஒன்றியமாக தமிழ்நாட்டில் காணப்பட்டு வருகிறது.
மேலும் பழனி அருகே மலைகளின் இளவரசி கொடைக்கானல் அமைந்துள்ளது.
மேலும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. தொழில் நகரமாக உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகள் அமைந்துள்ளன. மேலும் விரிவுபடுத்தப்பட்ட பகுதியாக தாராபுரம் நகர் பகுதி அமைந்துள்ளது. இவை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு பழனியை தலைமை இடமாக வைத்து பழனி வருவாய் மாவட்டம் அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்கப்பட்டன.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது பழனி நகருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கழக ஆட்சி அமைந்த உடன் பழனியை வருவாய் மாவட்டமாக அறிவிப்பேன் என்று வாக்குறுதி அளித்த நிலையில் உடனடியாக வாக்குறுதி நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகிறார்.