June 9, 2025
மும்மொழி கொள்கையை ஆதரித்து ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்.

மும்மொழி கொள்கையை ஆதரித்து ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்.

ஆண்டிபட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் மும்மொழி கொள்ளைக்கு ஆதரவு தெரிவித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநில அரசை கண்டித்தும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இதற்கு நகர் தலைவர் மனோஜ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பிரச்சார அணி தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாநில நெசவாளர் அணி கணேசன் முதல் கையெழுத்து போட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்களது ஆதரவை தெரிவித்து கையெழுத்திட்டனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய தலைவர் வெங்கடேசன், நகர துணைத் தலைவர் நீலமணி, நகர பொதுச்செயலாளர் சுரேஷ் ,பாலா நிர்வாகிகள் முருகன், நீதிபதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.