
திமுக ஆட்சியில் தமிழ்நாடு பெயரை மாற்றிவிட்டு கலைஞர் மாநிலம் என மாற்றினாலும் ஆச்சரியமில்லை முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் ஆவேச பேச்சு
நிலக்கோட்டை, மார்ச்.4-
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே, பள்ளபட்டியில் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். நிலக்கோட்டை நகரச் செயலாளர் வி.எஸ்.எஸ். சேகர் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கொண்டு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசியதாவது:- நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கு, தேவையில்லாமல் மொழி பிரச்சனையை தூண்டிவிட்டு மக்களின் மனதை திசை திருப்ப வேண்டாம் . திமுக தனது 525 வாக்குறுதிகளை கொடுத்து விட்டு எதை நிறைவேற்றி இருக்கிறீர்கள்? மத்திய அரசு உதவி கிடைக்கிறதோ கிடைக்கவில்லையோ? தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து நிதியிலிருந்து திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற முடியும்.
மாநில அரசு செய்ய வேண்டிய கடமைகளை இந்த அரசு செய்யவில்லை. மக்களுக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றிய கடமை இந்த அரசுக்கு உள்ளது. ஆனால் அதிமுக அரசு பல கால கட்டங்களில் மத்திய அரசு கொடுக்காத திட்டங்களை போராடி, வாதாடி நிதியைப் பெற்று, மாநில அரசு நிதியை வைத்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு தேவையான நிதி உதவியும் பல்வேறு திட்டத்தையும் திறம்பட செய்து வந்தார். எந்தத் திறமையும் இல்லாத ஸ்டாலின் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசுகிறார். சட்டமன்றத்தில் அவருக்கு பேச தெரியாது.
மக்கள் பாராட்டுவதற்கு பதிலாக அப்பன் மகனை பாராட்டுகிறார். மகன் அப்பனை பாராட்டுகிறார். குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. கார் பந்தயம் நடத்தி அதற்கு மக்களின் வரிப்பணம் 100 கோடி ரூபாய் செலவு செய்கின்றனர்.
கார் பந்தயத்திற்கு செலவு செய்த 100 கோடி ரூபாய் மக்களுக்கு செலவு செய்திருக்கலாம்? எதற்கெடுத்தாலும் கலைஞர் திட்டம், கலைஞர் திட்டம். தமிழ்நாடு பெயரை மாற்றிவிட்டு கலைஞர் மாநிலம் என மாற்றினாலும் ஆச்சரியமில்லை. தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி வழங்கும் திட்டம், படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசம் மடி கணினி திட்டம் இப்படி எண்ணற்ற திட்டங்கள் நிறுத்தப்பட்டுவிட்டது.
பொங்கல் பணம் கொடுக்கவில்லை. திராவிட மாடல் என்று சொல்லும் இந்த அரசு பொங்கல் பணம் வழங்க எங்களிடம் நிதி இல்லை என்கிறார்கள். நிதி போதுமான அளவு உள்ளது அவர்களுக்கு வழங்குவதற்கு மதி இல்லை. அவர்களுக்கு கொடுக்க மனமில்லை. இதனால், நிதி இல்லை என்கிறார்கள். இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் பேசினார். கூட்டத்தில், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஜெயசீலன்,சீனிவாசன், ஒன்றிய அவைத்தலைவர் தவமணி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி,மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கபாண்டியன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன்,நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன்,நிலக்கோட்டை ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ்,நகர பொறுப்பாளர் மோகன் குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கனி குமார்,மாவட்ட பிரதிநிதி சேசுராஜ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, நிலக்கோட்டை எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முனியப்பன், பள்ளபட்டி வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி ராஜா, ஒன்றிய சிறுபான்மை பிரிவு பொருளாளர் மில்டன், பள்ளபட்டி கிளை மேலவை பிரதிநிதி ஜெயராஜ், எம்ஜிஆர் மன்ற ஒன்றிய துணைத் தலைவர் சதீஷ்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.