June 8, 2025
பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் 99 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது

பழனி அடிவாரம் நகராட்சி நடுநிலை பள்ளியில் 99 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த 99 ஆவது ஆண்டு விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ராதா தலைமை வகித்தார்.

பள்ளியில் சிறப்பு அழைப்பாளர்களாக கல்வி அலுவலர் குமுதா நகராட்சி வார்டு உறுபினர்கள் விமல பாண்டியன், தீனதயாளன், ராமநாதன், முத்துச்சாமி, முனியப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரிண்டு மோல். தினேஷ் பாபு. தினேஷ்குமார். குமாரசாமி. சிபிக்குமார். ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, இலக்கிய மன்றம் கலைத் திருவிழா, போன்றவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் பரதநாட்டியம், கிராமிய நடனம், பேச்சுப்போட்டிகள், விழிப்புணர்வு சம்பந்தமான கலை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் கல்வி பயிலும் நான்காம் படிக்கும் மாணவன் கோகுல்நாத் ஆங்கிலத்தில் சரளமாக பேசி அனைவரையும் வியப்பில் ஆழ்தினார் மற்றும் இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் முன்னாள் படித்த மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.