
பழனியில் தனியார் மதுபான கடைகளில் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியாருக்கு சொந்தமான பார் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அருந்ததியர் மற்றும் தலித் கூட்டமைப்பு முற்போக்கு இயக்கங்கள் பழனி நகரம் ஒன்றியம் சார்பாக தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அனுமதி வழங்கிய கலால் நிர்வாகத்தினை கண்டிக்கும் விதமாக பழனி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி கண்டனத்தை தெரிவித்தனர். போஸ்டரில் கூறியுள்ளதாவது: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி, அரசு உதவி பெறும் பீட்டர் டேவிட் தொடக்கப்பள்ளி, உள்ள இடத்தின் அருகே உள்ள எஃப் எல் 2 தனியார் மதுபான கடை உரிமத்தை ரத்து செய் எனவும் தலித் மக்கள் அடர்த்தியாக வாழும் சத்யா நகர், ஜவகர் நகர், மற்றும் பொதுமக்களை குறி வைத்து திறக்கப்பட்ட மெஜஸ்டிக் பார் உரிமத்தை ரத்து செய் எனவும் ரயில்வே கேட் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய் தனியார் மதுபான கடையின் உரிமத்தை ரத்து செய்! ரத்து செய்!! ரத்து செய்!!! என்ற வாசகங்களை போஸ்டரில் அச்சிட்டு கண்டனத்தை தெரிவித்தனர்.