
பழனி அருகே மகளிர் குழுவில் பணத்தை பெற்று கொண்டு தலைவி தலைமறைவு - ஐந்து பெண்கள் விசமருந்தி தற்கொலை முயற்சி பழனி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி 14 வது வார்டு பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி ராதிகா என்பவர் மகளிர் குழு தலைவியாக உள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (35), காந்தியம்மாள் (50), செண்பகம் (45), அன்னத்தாய் (55) , சித்ராதேவி (37) , என்கிற பெண்களிடம் தனியார் வங்கியில் குழு பெயரில் பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை மாதாமாதம் பணத்தை நானே செலுத்தி கொள்கிறேன் என்று கூறி ஒவ்வொருவரின் பெயரிலும் 18 ஆயிரம் முதல் , 70 ஆயிரம் ,1 லட்சம் ,1 1/2 லட்சம் என முன்று லட்ச ருபாய் வரை பணத்தை பெற்று கொண்டு மாதம் தோறும் தவனையை குழு தலைவி ராதிகா செலுத்தி வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக மகளிர் குழுவில் பணம் செலுத்தவில்லை எனக்கூறி அந்த ஐந்து பெண்களிடம் மகளிர் குழுவை சேர்ந்த ஊழியர்கள் தொடர்ந்து நெருக்கடி செய்து வந்தார்கள். இதுகுறித்து கேட்ட பெண்களிடம் குழு தலைவி விசமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு போலிசார் விசாரணையில் இந்த ஐந்து பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி இரண்டு மாதம் அவகாசம் கோரியுள்ளார்.
இந்த அவகாச இடைவெளியில் குழு தலைவி ராதிகா சொந்த வீட்டை விற்று விட்டு நேற்று இரவு வீட்டை காலி செய்து விட்டு தப்பி செல்ல முயன்றதால் மனமுடைந்த ஐந்து பெண்களும் சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சித்துள்ளனர். விசமருந்திய பெண்களை அருகில் இருந்தவர்கள் பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டுள்ளனர்.
இதுகுறித்த ஆயக்குடி போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழனியில் மகளிர் குழு தலைவி பெண்களிடம் பணத்தை பெற்று கொண்டு தப்பி ஓடியதால் மனமுடைந்த பெண்கள் விசமருந்தி தற்கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.