
நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து நிறைவு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
நிலக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 40 ஆண்டு காலமாக முதுநிலை எழுத்தர் ஆக பணியாற்றி வந்த நடராஜன் வயது முதிர்வின் காரணமாக பணிநிறைவு பெற்றார்.
அவருக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை நிதி மற்றும் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை சங்கத்தின் செயலாட்சியர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் கார்த்திகைசெல்வி வழங்கி வாழ்த்தி பேசினார். இவ்விழாவில் முன்னதாக சங்க செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் நடராஜனுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
விழாவில் நிலக்கோட்டை சரக மேற்பார்வையாளர் பாஸ்கரன், முன்னாள் கூட்டுறவு சங்க செயலாளர் பொன்முருகன் மற்றும் கூட்டுறவு சங்க செயளாளர்கள் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.