
பழனி மனநலம் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதிய தாராபுரம் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட மனநலக் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்டோர் அங்கு வசித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு காப்பகத்தில் உள்ளவர்களுக்கு மதிய உணவு மூன்று வகையான காய்கறிகள் வடை அப்பளம் பாயாசம் வழங்கப்பட்டது.
அப்பொழுது காப்பகத்தில் உள்ளவர்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நல்ல ஆரோக்கியத்துடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என வாழ்த்தினார் இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் பேரூர் கழகச் செயலாளர் சின்னத்துரை பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன் துணைத் தலைவர் சுதாமணி கார்த்திகேயன் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திகேயன் மற்றும் திமுக கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.