June 8, 2025
பழனி அருகே ஆயக்குடியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

பழனி அருகே ஆயக்குடியில் திமுக சார்பில் தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயக்குடி பேரூர் திமுக சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தக உபகரணங்கள் வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன..

இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னத்துரை ஒன்றிய செயலாளர் சுவாமிநாதன் பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன் துணைத் தலைவர் சுதாமணி கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று பள்ளி மாணவ மாணவிகளிடையே தமிழக அரசின் செயல் திட்டங்கள் பற்றியும் பள்ளி கல்வித்துறைக்கு தமிழக அரசு செய்துவரும் செயல்பாடுகள் பற்றியும் மாணவிகளிடையே எடுத்துக் கூறி முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து இந்நிகழ்வில் ஆயக்குடி திமுக கவுன்சிலர்கள் கட்சி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு தமிழக முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.