
அலங்காநல்லூரில், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.அலங்காநல்லூரில், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அலங்காநல்லூரில் ஸ்ரீ சொர்ண பைரவர் ஸ்ரீ மகா பிரத்தியங்கா ஸ்ரீ வராகி ஸ்ரீ மஞ்சமலை நாகம்மாள் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வெள்ளி மலை மேல் அமைந்துள்ள ஸ்ரீ ராஜமீனாம்பிகை ஸ்ரீ ராசலிங்கேஸ்வரர் வளாகத்தில், அமைந்துள்ள ஸ்ரீ சொர்ண பைரவர் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி ஸ்ரீ வராகி ஸ்ரீ மஞ்சமலை நாகம்மாள் மற்றும் 18 சித்தர்கள் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக,
சிறப்பு யாகம் நடைபெற்றனர் .
அதனைத் தொடர்ந்து , அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் , அலங்காநல்லூர் அயப்பன் கோவில் நிர்வாகி ஏ .எல். சீனிவாசன் கலந்து கொண்டு சிறப்பு செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகி ராஜ் சுவாமி செய்திருந்தனர்.