
பாதை மாறுகிறதா பாதாள சாக்கடை திட்டம்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சி வெ கணேசன் அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து திட்டக்குடி மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு வளர்ச்சி பணி திட்டங்களை முன்னிறுத்தி அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட 8.5 கோடி பாதாள சாக்கடை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும் வதிட்டபுரம் பத்தாவது வார்டு வழியாக செல்லும் சாக்கடையில் நகர் மன்ற பெண் தலைவர் வெண்ணிலாவின் உறவினர்கள் இருப்பதாலும் மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அரசு பெண் ஊழியரிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு அவர்களுக்கு தகுந்தார் போல் நகர்மன்ற தலைவர் வெண்ணிலா சாதகமாகவும்,
நகராட்சியால் ஆக்கிரமிப்பு என்று சொல்லி இடித்து கொடுக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்ட உறவினர்களுக்காவும் சாதகமாக செயல்பட்டு வருவதாகவும் இவருக்கு சாதகமாக செயல்படாத மூன்று வீடுகளை இடித்து விட்டதாகவும் வதிஷ்டபுரம் காலனி பள்ளிக்கு பின்புறம் உள்ள விளையாட்டு திடல் மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும் சுருக்க முயற்சிப்பதாகவும் ஊர் இளைஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிகழ்வை கண்டித்து தமிழக முதல்வர் கலந்து கொண்ட பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெறும் நாளில் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்யலாம் என்று முடிவு செய்து இருந்தனர் பின்பு அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வதிஷ்டபுரம் பகுதியில் திட்டக்குடி நகர்மன்ற தலைவர் வெண்ணிலாவை கண்டித்தும் அவருக்கு ஆதரவாக செயல்படும் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி வெ கணேசனை கண்டித்தும் கூடிய விரைவில் போராட்டம் நடத்த இருப்பதாகவும் பகுதி இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.