
கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதியில் அனுமதி இல்லாமல் மரம் ஏற்றும் இயந்திரம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் அரிய வகையான மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் மரம் ஏற்றும் இயந்திரங்கள் போக்குவரத்து காணப்படுகின்றன.
ஆனால் ஒரு சில சமூக ஆர்வலரும் மர வியாபாரிகளும் கொடைக்கானல் பண்ணைக்காடு பகுதிகள் மரம் வெட்டுவதற்கு தற்பொழுது மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலர்கள் எந்த ஒரு அனுமதியும் பிறப்பிக்கப்படவில்லை.

ஆனால் தற்பொழுது இரவு நேரங்களில் மரங்கள் வெட்டப்படுவதாகவும் பொதுமக்கள் கூறப்பட்டு வருகின்றனர்.
இதற்கு காரணம் எந்த ஒரு அனுமதி இல்லாமல் மரம் ஏற்றும் இயந்திரம் வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் செல்லும் செக்போஸ்ட் வழியாக விடப்படுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

மேலே செல்லும் மர இயந்திரங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வன அலுவலர்களுக்கு தெரியாமல் இந்த நிகழ்வு நடைபெற்று வருகிறதா என சமூக ஆர்வலரும் பொதுமக்களும் கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட வன அதிகாரிகளும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா அரிய வகை மரங்களை காப்பார்களா என கோரிக்கை வைத்துள்ளனர்.