
திருக்குர்ஆன் மனனமாக ஓதும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் ஜாமிஆ அல்அஷரத்துல் முபஷ்ஷரா இறையியல் கல்லூரி சார்பில் ஒரே நாளில் ஒரே நபர் திருக்குர்ஆன் முழுவதும் மனனமாக ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருக்குர்ஆனை மனனமாக கல்லூரியின் மாணவர் அல்ஹாபிழ். சையது பாசித் ஓதினார். ஜே.ஏ.எம். இறையியல் கல்லூரி தலைவர் அல்ஹாஜ்.அபுதாஹிர் தலைமை தாங்கினார். மௌலானா அஜீஸுர் ரஹ்மான் ஆலிம், முஹம்மது அலி மன்பஈ ,
மௌலானா முஜீபுர் ரஹ்மான் பாகவி,அமீர் தங்கள் பாகவி, ஹாஜி.உபயதுல்லாஹ் ,
ஹாஜி.முஹம்மது ரஃபீக், ஜனாப்.முஹம்மது இம்ரான் , ஜனாப்.முஜீப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மௌலானா. அல்ஹாஜ். முஹம்மது ஹுஸைன் மன்பஈ, ஹழ்ரத் வரவேற்புரையாற்றினார். மௌலானா. அலாவுத்தீன் மிஸ்பாஹி, ஹாஜி.மீரா மைதீன்,
ஹாஜி. முஹம்மது இத்ரீஸ், அல்ஹாஜ். அப்பாஸ் , ஜனாப். நைனார் முஹம்மது
ஜனாப். முஹம்மது அப்துல் காசிம் . ஜனாப்.முகமது அலி ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மௌலானா. காஜி. அப்துல் அஹத் பாகவி நன்றி கூறினார்.
மத்ரஸாவின் பேராசிரியர்கள் முஹம்மது ஹுஸைன் மன்பஈ , மௌலானா. ஜியாவுத்தீன் தாவூதி, அப்துல் அஹத் பாகவி, அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி,
அப்துர் ரஹ்மான் ஜமாலி , அக்சர் அலி இஸ்மாயில் கௌசி, அப்துல் சுக்கூர் நூரானி,
மௌலானா முஹம்மது ஷாஜஹான் பாகவி, பீர் சையது முபஷ்ஷரி , இம்ரான்கான் அன்வாரி , முஹம்மது தமீமுல் அன்சாரி கலீமி , அபூபக்கர் சித்திக் யூசுஃபி , முஹம்மது தன்ஷீர் யூசுஃபி , ஆலிம் அஹமது முஸ்தபா, ஜாமியா பள்ளி தலைவர், அப்பாஸ், எஸ்டிபிஐ கட்சி தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாக்கவி, எம்.ஏ. உஸ்மான் அலி காஷிபி, அனைத்து பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.