June 8, 2025
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள கைலாசபட்டி பகுதியில் உள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களது பண்ணை வீட்டில் பிப்ரவரி 24 ல் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவினை மாவட்ட அளவில் சிறப்பாக கொண்டாடுவது என்றும், அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி ,ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்குதல் என்றும் முடிவெடுக்கப் பட்டது. சின்னமனூர் பகுதியில் இரட்டை மாட்டு வண்டி பந்தையம், 1000 நபர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.

பெரியகுளம் நகர் பகுதியில் அதிக அளவில் விளம்பர பதாகைகள் அமைத்தல், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், மற்றும் 500 நபர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்குதல் என முடிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கறிஞர் அணி சார்பில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிப்ரவரி 24 அன்று பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்குதல் என ஆலோசனை கூட்டத்தில் முடிவுகள் மேற்கொள்ளப் பட்டது.

இக்கூட்டத்தில் தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம். சையதுகான், முன்னாள் தேனி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ப.ரவீந்திரநாத், கழக அமைப்பு செயலாளர்கள் மஞ்சுளா முருகன், என். வி. ராதா, ஜெயபாண்டியன். பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் செல்லமுத்து, பெரியகுளம் நகர் கழக செயலாளர் அப்துல் சமது, துணை செயலாளர் ஓ.சண்முக சுந்தரம் உட்பட கழக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கழக தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.